Ads Here

02 செப்டம்பர், 2021

அவ்வப்போது மனதில் உதிப்பவை

பிறரை வருத்தாது, வையத்துள்வாழும் நெறியறிந்து  வாழ்பவர்களே, தெய்வமென எண்ணப்படுகிறார்கள்.
-------

முன்னோர்கள் செய்த ஒரு விடயம் மூடநம்பிக்கை என்று பின்னாளில் வந்தவர்கள் நினைத்திருந்தால், வழிவழியாக அது அடுத்த தலைமுறைக்கு எப்படி கடத்தப்பட்டிருக்கும். 

காரணத்தை ஆராயாமல் கண்மூடித்தனமாக சொல்லுபவர்கள் சொல்லும் வார்த்தை 'மூடநம்பிக்கை'

---------

கிழக்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் கொண்டல் என்றார்கள்.
மேற்குப்பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் கோடை என்றார்கள். (பாலைவனம் - பாலை மரங்கள் நிறைந்த வனம் - கோடை - கொடுமை)
வடக்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் வாடை என்றார்கள்.
தெற்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் தென்றல் என்றார்கள்.
நன்றி : திருத்தம் பொன். சரவணன்

-----------

ஆட்சிக்கு வந்தபின் அரசியல் செய்யாதே.

விளக்கம் : தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மக்கள் பணியை மட்டுமே செய். ஆட்சியில் இருக்கும் காலத்தில் மக்கட்பணிக்கு மாறாக, கட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதே. அதைப்பற்றி நினைத்துக்கூட பாராதே.

-----------
கல்லணையில் பழங்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய நீரிலும் ஒட்டக்கூடிய பசை


சுண்ணாம்புக்கல், மணல், வெல்லம், கடுக்காய், முட்டையின் வெள்ளைக் கரு இவை அனைத்தையும் நைய அரைத்து கிடைக்கும் பசையை வைத்து கருங்கல்லைக் கூட ஒட்ட வைக்கலாம். இப்பசை மீது நீரை ஊற்றி காற்று புகாமல் மூடி நீண்ட காலம் கூட பயன்படுத்தலாம். பினிஷிங் பண்ண ஈயத்தை கரைத்து ஊற்றுவார்கள். 

----

இந்திய அரசியல் - சர்வாதிகாரத்தின் நவீன பெயர்

 (1) அரசியல் புத்தகத்தில் உள்ளது தான் சட்டம் - ஆனால் அதில் குறைகள் ஏதும் இருந்தால் அதை எளிதிலும் திருத்த முடியாது. மேலும் அதைக் கொண்டு வருவோரோ படிப்பறிவும் பொதுநலபுத்தியும் இல்லாத திருட்டு குடும்பங்களைச் சேர்ந்து அரசியல்வாதி குற்றவாளிகள். மேலும் அவர்களே திருந்த வேண்டும் என்று நினைத்தால்கூட 'அரசியல்வாதிகள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்' என்ற வார்த்தையை அவ்வரசியல் சாசனத்தில் சேர்ப்பது அவர்களுக்கே எளிதான விஷயமல்ல.ஏனெனில் மனசாட்சித்தன்மை என்பதற்கே எளிதில் விளக்கம் கொடுக்க வேண்டும் அல்லவா?

(2) எங்கே மக்கள் போராட்டம் செய்து ஆட்சிக்கு இடையூறாக இருப்பார்களோ என்று, சர்வாதிகாரத்தின் ஒரு பிரிவான சட்ட ஒழுங்கு லஞ்ச காவல்துறையை பயன்படுத்தி, மக்களை தீவிரவாதிகளாக மாற்றும் அமைப்பு
உலவுகிறதே!

(3) தனது மாநில உரிமையை தராமல் தட்டி இழுத்தடிக்கும் ஹிந்திய மத்திய அரசைக் கேட்கும் பிற மாநிலத்தோரை "இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைச்சாலையில் இருந்து அம்மாநிலங்கள் தமது விடுதலையைத் தேடி பிரிந்துவிடும். அப்படி பிரிந்துவிட்டால் அவர்கள் வளர்ந்து விடுவார்கள்." என்ற அச்சத்தோடு அவர்களை பிரிவினைவாதி, பயங்கரவாதி, தீவிரவாதி, தேசத்துரோகி என்றெல்லாம் சொல்லி கொல்லும் மனப்போக்கு.

(4) ஏழையின் சிறுகுற்றத்துக்கே ஜெயில்; ஆனால் பணக்காரனின் பெருங்குற்றத்துக்கோ வெறும் பெயில் - இதுதான் நீதியை நிலைநாட்டும் நீதியரசர்களின் நீதி.

(5) மத்திய ஆளுங்கட்சிக்கு சார்பானவர்தான் ஒவ்வொரு முறையும் குடியரசுத்தலைவர். - இது மக்களுக்கே தெரியும். அதேபோல் அவருக்கும் மாநிலத்தின் சுய ஆட்சியை கெடுக்க ஆளுநர் என்ற கண்காணி (கங்காணி) பதவியாளர்கள். இரண்டுமே மக்களாட்சி நாட்டில் இருக்கும், ஆனால் மக்களை கட்டுப்படுத்தும் பயங்கர பதவிகள். ஆனால் இந்த அரசியலமைப்பு புத்தகமே, சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று, பிற நாட்டாவர்களைப் பார்த்து, அவர்களைப்போல் நீ இருக்க வேண்டும் என்று கட்டளையிடும் அடிமைசாசன புத்தகமாகத்தான் இன்றுவரையிலும் உள்ளது. இந்த அரசியல் பதவிகளும் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களும் முகலாயர்களும் உருவாக்கியவைகள் தானே. இவை மட்டும் எப்படி நம்மை நல்வழிக்கு இட்டுச்செல்லும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக