Ads Here

04 ஜூலை, 2021

சித்த மருத்துவக் குறிப்புகள்

சித்த மருத்துவக் குறிப்புகள்

Siddha medicine

  • விளக்கெண்ணெயை (Castor oil) பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்தலாம். சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.
  • தோல் நீக்கப்பட்ட கேரட், பீட்ரூட், ஆப்பிள், இஞ்சி, புதினா இலை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்து வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதும். உடல் நிறமாற்றம் அடைந்து விடும் (body colour change). 
  • இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய்யை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம். சரும சுருக்கங்கள் நீங்கி புதுப் பொலிவு கிடைக்கும்.
  • (Pimple medicine) முகப்பருவால் அவதிப்படுபவர்கள் காட்டன் துணியில் விளக்கெண்ணெய்யை முக்கி, முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பு இவ்வாறு தேய்த்துவிட்டு காலையில் எழுந்ததும் கழுவி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். முகப்பருவை மட்டும் போக்காமல் சருமத்தில் படியும் அழுக்குகள், இறந்த செல்களும் நீங்கிவிடும். சருமமும் மென்மையாக மிளிரும்.
  • குளிப்பதற்கு முன், விளக்கெண்ணெய்யை உடலில் தடவிக்கொண்டு குளித்தால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். விளக்கெண்ணெய்யில் உள்ள புரத மூலக் கூறு, முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. முகப்பருக்களின் மீது விளக்கெண்ணெய்யை தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • (Dry Skin Medicine & Sun cream) சரும வறட்சி, சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணியாக செயல்படும். முகத்தில் விளக்கெண்ணெய்யை அழுத்தமாக தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் போதும்.
  • சருமத்தில் எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள விளக்கெண்ணெய்யை பயன்படுத்தலாம். சரும வறட்சி உள்ள பகுதிகளில் விளக்கெண்ணெய்யை மென்மையாக தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • கச்சக்காய் அல்லது கழற்சிகாயை ஒரு மாதம் வரை பெண்கள் தினமும் சாப்பிட்டு வர வேண்டும். இதை சாப்பிடுவதற்கு மிகவும் கசப்பாக தான் இருக்கும். இருந்தாலும் இந்த பருப்புடன் 3 அல்லது 4 மிளகு சேர்த்து உட்கொண்ட பிறகு கொஞ்சம் மோர் சாப்பிடலாம். இவ்வாறு ஒரு மாதம் வரை சாப்பிடுவதால் கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) பிரச்சனைகள் குணமாகும். முக்கிய குறிப்பு: குறிப்பாக இந்த மருந்தை உட்கொள்ளும் போது வேறு எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள கூடாது. நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் : கச்சக்காய் நாட்டு மருத்துவ கடையில் அதிகமாகவே கிடைக்கும். இந்த கச்சக்காயை உண்டு வர கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) கரையும். இந்த கச்சக்காயை தினமும் சாப்பிட்டு வர கருப்பையில் உள்ள கெட்ட நீர்கட்டிகள் வெளியேறும்.

  • பிரசவத்தின்போது வயிற்றில் ஏற்படும் தழும்புகளை போக்கவும் விளக்கெண்ணெய்யை பயன்படுத்தலாம். அதில் கொழுப்பு அமிலம் அதிகம் கலந்திருக்கிறது. அது தசைப்பகுதியை நெகிழ்வடைய செய்ய உதவும். பிரசவமான சில நாட்களிலேயே வயிற்றில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • முகத்தில் சிவப்பு தழும்புகள் படர்ந்து அவதிப்படுபவர்களுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணம் தரும். இரவில் தூங்க செல்லும் முன்பாக விளக்கெண்ணெய்யை முகத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சரும செல்களும் வளர்ச்சி அடையும். முகம் பிரகாசமாக காட்சியளிக்கும். 
  • விளக்கெண்ணெய்யை தினமும் தூங்கச் செல்லும் முன், கண்களைச் சுற்றிலும் தடவிக்கொண்டு படுத்தால் கண் எரிச்சல் குணமாகும்.
  • கண்பார்வை (eye sight) அதிகரிக்க தினமும் வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
  • விளக்கெண்ணெய்யில் உள்ள 'ரிகினோலிக் அமிலம் சருமத்தில் உள்ள வீக்கம், புண்களை குணமாக்கும் சக்தி படைத்தது. சருமத்தில் ஏற்படும் சிவப்பு, தடிப்பு, அரிப்பு போன்ற பாதிப்புகளுக்கும், பூஞ்சை தொற்றுக்கும், விளக்கெண்ணெய்யை சிறிதளவு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் தடவி வரலாம்.
  • 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில், சுத்தமான பருத்தித் துணியை நனைத்து, முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவலாம். இது சருமத்துக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
  • நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய்யை சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். 
  • தேங்காய் எண்ணெய்யில் சில துளிகள் விளக்கெண்ணெய்யை சேர்த்து தினமும் தலைமுடிக்குத் தடவி வருவதால், உடல் உஷ்ணம் குறையும். கூந்தல் மிருதுவாகவும், மினுமினுப்புடனும் இருக்கும்.
  • (Dandruff medicine) விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து முடியின் வேர்ப்பகுதியில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு குளிக்கலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால் தலையில் இருக்கும் பொடுகு நீங்கும். முடி உடையாமல் செழித்து வளரும்.
  • விளக்கெண்ணெய்யில் உள்ள ஒமேகா 9 கொழுப்பு அமிலம், முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து, கூந்தலின் வளர்ச்சியையும், அடர்த்தியையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை விளக்கெண்ணெய்யை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கூந்தலில் ஏற்படும் வறட்சி குறையும்.
  • தினமும் இரவு படுக்கப்போகும் முன்பு, கண் இமைகளில் விளக்கெண்ணெய்யை தடவி வரலாம். இவ்வாறு செய்வதால் கண் இமைகள் அழகு பெறும்
  • (Feet Crack medicine) பாதங்களில் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் தூங்கச் செல்வதற்குமுன், வெடிப்புக்களின் மீது விளக்கெண்ணெய்யை தடவினால், பித்தவெடிப்பு குணமாகும்.
  • துளசி இலைச்சாறு சாப்பிட்டால், ரத்தத்தில் விஷத்தன்மை வெளியேறும்.
  • (Hemoglobin increase medicine) அருகம்புல் சாறு சாப்பிட்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்; தோல் வியாதிகளுக்கும் இது அருமருந்து
  • வாழைத்தண்டு சாறை மருத்துவர் ஆலோசனைப்படி, உரிய இடைவெளியில் சாப்பிட்டால், சிறுநீரகத்தைச் சுத்தம் செய்யும்.
  • (Neurasthenia medicine) கொத்துமல்லிச்சாறு பசியைத் தூண்டும்; வாதம், நரம்புத்தளர்ச்சியைக் குணமாக்கும்.
  • புதினாச்சாறு ஒரு சிறந்த மலமிளக்கி ஆகும். அது ஜீரணக்கோளாறை சரிசெய்யும்.
  • வல்லாரைச் சாறு, மஞ்சள் காமாலை, நரம்பு தளர்ச்சி, ஞாபசக்திக்கு அருமருந்து.
  • தூதுவளைச்சாறு நரம்பு தளர்ச்சியை போக்கும்; சளியை விரட்டும்.
  • மணத்தக்காளிச் சாறு வாயுத்தொல்லையை (Gas Trouble) தீர்க்கும்.
  • (Cold Medicine) தும்பைச்சாறு, இருமல், மார்புச்சளிக்கு அருமருந்து
  • (Bad cholesterol medicine) வெங்காயம் மற்றும் பூண்டு கலந்த சாறு, கெட்டக்கொழுப்பைக் குறைக்கும்.
  • காய்கறி சாறு, சாப்பிட்ட 20 நிமிடத்தில், ஜீரணமாகி சக்தியாக மாறிவிடும்.
  • இஞ்சியை அரைத்து, சாறு எடுத்து, சிறிது நேரம் வைத்திருந்தால், சுண்ணாம்பு மாதிரி அடியில் தங்கும். இதை அகற்றி, தெளிந்ததை தேன் கலந்து சாப்பிடுவது உடலுக்கு நலம் தரும்.
  • சுண்டைக்காய் சூப் (Turky Berry Soup), சளி, கபம், இருமல், வாந்தி, மயக்கம்,  உடல் சோர்வை போக்கும்.
--------

கர்ப்ப கால உணவுமுறை

Foods for pregnancy diabetes

கர்ப்பிணிகளுக்கான உணவுமுறை

Foods for pregnant women

    • கர்ப்ப காலத்தில் கார்போ ஹைட்ரேட் (carbohydrates) அதிகமுள்ள உணவுகளைக் குறைவாக உண்ண வேண்டும். 
    • புரதச்சத்து (proteins) அதிகம் உள்ள முட்டை, பால், காய்கறிகள், இறைச்சி, சோயா பீன்ஸ், முளைகட்டிய தானியங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
      • கருவளரும் காலங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர் (Tender coconut water), எலுமிச்சை சாறு, மோர் போன்ற ஆரோக்கியமான பானங்களைப் பருகலாம்.

        கால்சியம் சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவுமுறை :

        • பால், முட்டை, வெண்ணெய் (Butter), கேழ்வரகு போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். 

        ஃபோலிக் அமிலச்சத்து குறைபாடுள்ள (Folic acid deficiency) கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவுமுறை :

        • பீன்ஸ், ஆரஞ்சு, கைக்குத்தல் அரிசி, பேரீச்சம்பழம், எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். 

        வைட்டமின் சி (Vitamin C) குறைபாடுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவுமுறை :

        • ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி (Indian Gooseberry), கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம்.

          வைட்டமின் பி 12 (Vitamin B 12 or Cobalamin) குறைபாடுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவுமுறை :

          • அசைவ உணவுகள் (Non-vegetarian) அனைத்தையும் சாப்பிடலாம். 
          • சைவ உணவு (Vegetarian) உண்பவர்கள் இந்த வைட்டமின் பி 12 குறைபாட்டை சரி செய்ய, மாத்திரை வடிவத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

            இரும்புச்சத்து அல்லது அனீமியா (Iron deficiency) குறைபாடுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவுமுறை :

            • முருங்கைக்கீரை, முருங்கைக்காய், சுண்டைக்காய், கடலைமிட்டாய், பேரீச்சம்பழம், முட்டை, ஈரல் (Liver), கைக்குத்தல் அவல் (Hand Pounded Rice Flakes), கேழ்வரகு (Finger millet), உலர் திராட்சை (Raisins or Kismis) போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். 

            இரத்தசோகை அல்லது  சிவப்பணுக்கள் குறைபாடுள்ள (Anemia) கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவுமுறை :

            • இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

              சர்க்கரை நோய் (Blood Sugar) உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவுமுறை :

              • மா, பலா, வாழை போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 
              • மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம். 
              • கிழங்கு வகைகளைத் தவிர்க்க வேண்டும். 
              • அரிசி உணவைக் குறைத்து, காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். 

              ரத்த அழுத்தம் (Blood Pressure) பிரச்சினை உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவுமுறை :

              • உப்பு, எண்ணெய் இவற்றின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். 
              • ஊறுகாய் போன்ற பதப்படுத்திய உணவுகளை சாப்பிடக் கூடாது.

                தைராய்டு பிரச்சினை (Thyroid) உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவுமுறை :

                • உடலில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரக்கும் கர்ப்பிணிகள், முட்டைக்கோஸ், முள்ளங்கி, காலிஃபிளவர் போன்றவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
                -------
                • திருநீற்றுப் பச்சிலையில் (கரந்தைச் செடி - Ocimum Basilicum) இருந்து கிடைக்கும் சப்ஜா விதைகள் (கரந்தை விதைகள், Sabja seeds, also called tukmaria or basil seeds in english) ஜிகர்தண்டாவில் உடல் குளிர்ச்சிக்காகப் போடப்படுகின்றன்.
                • திருநீற்றுப் பச்சிலை செடியின் இலைகளைக் கசக்கி முகர்ந்தால் தலைவலி, நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகிவிடும். 
                • வாந்தியை நிறுத்துவதில் திருநீற்றுப் பச்சிலை ஒரு மிகச்சிறந்த மருந்து. ரத்த வாந்தியைக்கூட கட்டுப்படுத்தக்கூடியது. 
                • திருநீற்றுப் பச்சிலையில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடென்ட் (Antioxidants), பீட்டா கரோட்டீன் (Beta carotene) மற்றும் வைட்டமின் ஏ (Vitamin A) சத்தும் நிறைந்துள்ளன. இதில் மிகக்குறைந்த கலோரிகள் (Low Calories) உள்ளன. பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் (Minerals) இருக்கின்றன. இவைமட்டுமல்லாது சிட்ரால் (Citral), சிட்ரோனெலால் (Citronellol), ஜெரானியால் (Geraniol) போன்ற ஏராளமான மூலப்பொருள்களும் இதில் இருக்கின்றன.
                • தலையில் பேன் தொல்லை மற்றும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் திருநீற்றுப் பச்சிலை செடியின் இலைச் சாற்றை தனியாகவோ அல்லது எண்ணெய் கலந்தோ தேய்த்துக் குளித்தால் பேன், பொடுகுத் தொல்லைகள் போய்விடும். 
                • புண்ணாகிப் போன் பருக்கள் மற்றும் கரும்புள்ளி (Pimples and Black Spots)  பிரச்சினைகளுக்கு திருநீற்றுப் பச்சிலை செடியின் இலைகளைக் கசக்கி முகத்தில் தடவினால் போதும், பருக்கள் காணாமல் போய்விடும்.
                • திருநீற்றுப் பச்சிலையின் விதையை கஷாயம் வைத்துக் குடித்தால் உடலுக்கு சுறுசுறுப்பு கிடைப்பதோடு, சிறுநீரகக் கோளாறுகளும் சரியாகும்
                • மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் (Leukorrhea in period), உடல் உஷ்ணம் போன்றவற்றிற்கு திருநீற்றுப் பச்சிலை மிகச்சிறந்த மருந்து. 
                • இலைச் சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு வலி (Chest Pain Medicine), இருமல் (Cough), வாயு பிரச்சினைகள் (Gas trouble) சரியாகும். 
                • காது வலி (Ear Pain), காதில் சீழ் வடிதல் (Ear discharge treatment) போன்றவற்றுக்கும் திருநீற்றுப் பச்சிலையின் இலைச்சாறு கண்கண்ட மருந்து.
                • திருநீற்றுப் பச்சிலையின் இலைகள், பூக்கள், விதைகள் ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைத்த ஆரோக்கிய மூலிகைக் குளியல் (Herbal Bath) போடலாம். இதனால் படை (Hives), தேமல் (White patches) போன்ற தோல் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
                -------

                கணினித் திரையிடமிருந்து கண்களைப் பாதுகாக்க

                Protect your eyes from computer screen

                • கண்களை இமைக்காமல் இருப்பது விழித்திரை உலர்ந்து விடுவதற்கு (Dry macular degeneration / Retina Dryness) முக்கிய காரணமாகும். விழித்திரையை ஈரப்படுத்த கண்களை அடிக்கடி இமைக்க வேண்டும்.
                • அதிக வெளிச்சம் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கணினித் திரைகளின் வெளிச்சத்தைக் குறைக்கும் செயலிகள் மற்றும் ஸ்கிரீன்களை வாங்கிப் பயன்படுத்துங்கள்.
                • பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கட்டாயமாகக் கண்களை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் உருட்டலாம். பார்வை சமன்பாட்டுக்கு இந்தப் பயிற்சி உதவும்.
                • இருபது நிமிடத்துக்கு ஒரு முறைஇருபது அடி தூரத்தில் இருக்கும் பொருளை, தொடர்ந்து இருபது நொடிகள் உற்று நோக்க வேண்டும். காட்சிகளை பசுமையான அடிக்கடி பார்ப்பது கண்களுக்கும், மனதுக்கும் இதமாக இருக்கும்.
                • ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, கண்களை மூடியபடி மூன்று நிமிடங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அப்போது கண்களைப் பாதித்த அதிகப் படியான வெளிச்சம் குறைவதால், விழிகள் இயல்பான நிலைக்குத் திரும்பும்.
                • இரண்டு பென்சில்களை, இரு கைகளிலும் வைத்துக் கொண்டு, ஒன்றின் கூர்முனைப்பகுதியை, மற்றொன்றை நோக்கி நகர்த்தி இணைக்க வேண்டும். இந்தப் பயிற்சி கவனத்தை ஒருங்கிணைப்பதுடன், கண்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும்.
                • இரு உள்ளங்கைகளையும் சூடாகும் வரை தேய்த்து, இரு கண்களையும் மூடி, இமைகளின் மீது முப்பது நொடிகள் வைக்க வேண்டும். இவ்வாறு ஐந்து முறை செய்தால், கண் நரம்புகளின் மீது ஏற்படும் அழுத்தம் குறையும்.
                • தினமும் இரவு, பருத்தி பஞ்சை குளிர்ந்த தண்ணீரில் நனைத்து, கண்களின் மேல் பத்து நிமிடங்கள் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கண்கள் குளிர்ச்சி அடையும். கருவளையம் உண்டாகாது.
                -------
                • ஆரோக்கியமான சருமத்திற்கு குரூமிங் டிப்ஸ் (Grooming tips) : தினமும் சரியான முறையில் குளித்து, சுத்தமான தேங்காய் எண்ணெய்யை சில துளிகள் உடலில் தேய்த்துக்கொண்டால், தோலில் மினுமினுப்பும், வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்
                • முடிந்தவரை சீயக்காய் (சிகைக்காய்), மஞ்சள், துளசி, வேப்பிலை போன்ற இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தினால், சருமம் ஜொலிஜொலிக்கும்.

                --------
                ஆனை குன்றிமணி மரத்தின்  தாவரவியல் பெயர் அப்ரஸ் பிரிகட்டாரியஸ் என்பதாகும். இதனை அக்கால மக்கள் மணிச்சிகை, பவளக்குன்றி என்று அழைத்தனர். இரண்டு குன்றிமணிகள் (குன்றின் மணி) என்பது தற்காலத்தில் உள்ள ஒரு கிராம் அளவாகும்.  இதன் இலைகள், பட்டைகள், விதைகள் மருத்துவ குணங்கள் கொண்டவை. சித்தர்கள் உரைத்த அஷ்ட கர்ம மூலிகைகளில் குன்றிமணியும் ஒன்று.

                இதன் இலையை நன்கு  மசிய அரைத்து கை, கால்களில் தேய்த்து வந்தால் உங்களுக்கு வாத நோய் வரவே வராது.  அதையே கஷாயமாக்கி குடித்தால், சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது சட்டென நின்று விடும், உடல்வலி தீரும், சளி, இருமல் தொல்லைகள், வயிற்றில் புண்ணால் ஏற்படும் வலியும் ஓடி விடும். என் இளம் தளிர்களை கீரையாகவும் சமைத்து உண்ணலாம்.  இதனால் உங்களுக்கு செரிமான பாதிப்புகள் விலகுவதுடன், உடலுக்கு நல்ல சத்துகளுடன், வயிறும் நலம் பெறும். என் விதையை நன்கு அரைத்து கட்டி, புண்கள் மீது தடவினால் வீக்கம் குறைந்து இருந்த இடம் தெரியாது, புண்கள் சீழ் பிடிக்காது. என் மரப் பட்டைத் தூளை நீரில் சுண்டக் காய்ச்சி பருகினால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு மறைந்து விடும்.

                இதன் வேர்களை நீரிலிட்டு சுண்டக் காய்ச்சி பருகி வந்தால், உடலில் ஏற்படும் அரிப்பு, நமைச்சல், வெண் குஷ்டம், சொரி, சிரங்கு வரவே வராது.  குன்றிமணி விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை சமைக்கவும் பயன்படுத்தினால்,  உங்கள் செரிமானத்தைத் தூண்டி, ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை வெளியேற்றி விடும். குன்றிமணி, வெந்தயம் இவற்றை தூளாக்கி தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து பின் தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி உதிரும் பிரச்னை உங்களுக்கு இருக்கவே இருக்காது.  
                இது பூச்சிகள் அரிக்காத உறுதியான மரம் என்பதால், இதனைக் கொண்டு மேஜைகள், நாற்காலிகள், வீட்டு அலங்காரப் பொருள்கள், வீடுகளில் உள்அலங்கார வேலைகள் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். 
                ------
                சிறுநீரக கோளாறுகளுக்கு (Kidney Failure Siddha Medicine) (1) யானை நெருஞ்சில் வேர் + (2) மூக்கிரட்டை வேர் உலர் வேர்ப்பொடி கசாயம் மூவேளை
                யானை நெருஞ்சில்
                மூக்கிரட்டை
                ----------
                ஆடாதொடை இலைகள்
                சுவாச நோய்களுக்கு, ஆஸ்துமா பிரச்சினைகளுக்கு, நுரையீரல் பிரச்சினைகளுக்கு.
                ---------
                கழுத்து வலி (Neck Pain) குணமாக ஆடாதோடா இலையை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கி ஒத்தனம் கொடுக்க குணமாகும்.
                ---------

                கருத்துகள் இல்லை:

                கருத்துரையிடுக